சங்கரன்கோவில், பிப். 6: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி சங்கரகோமதி (43). பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவரான சங்கரகோமதி, கணவரை இழந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் குலதெய்வம் கோயிலான மாகாளியம்மன் கோயிலுக்கு உறவினர்களுடன் சங்கரகோமதி சென்றுள்ளார்.அன்றிரவு 9 மணிக்கு வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் முன் அறையில் பீரோ உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் பூஜை அறையில் இருந்த பீரோவையும் கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாததால் அதிலிருந் நகைகள், பொருட்கள் தப்பியது.இதுகுறித்து சங்கரகோமதி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.