×

மின்வாரிய அதிகாரி மனைவியிடம் 10 சவரன் அபேஸ் * குடியாத்தம் அருகே பரபரப்பு * ‘போலி’ ஜோதிடருக்கு வலை பரிகாரம் செய்ய உங்கள் கணவர்தான் அனுப்பினார் என கூறி

வேலூர், பிப். 6: பரிகாரம் செய்ய உங்கள் கணவர்தான் என்னை அனுப்பி வைத்தார் எனக்கூறி மின்வாரிய அதிகாரியின் மனைவியிடம் 10 சவரன் நகைகளை அபேஸ் செய்துவிட்டு தப்பிய போலி ஜோதிடரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(56). பாக்கம் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி(54) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஒரு நபர், ‘நான் ஜோதிடர். உங்களுடைய கணவர்தான் என்னை அனுப்பி ைவத்தார். உங்களுக்கு இரவில் அடிக்கடி தீய கனவுகள் வருவதாகவும், அடிக்கடி உடல் வலி ஏற்படுவதாகவும். அதற்கு பரிகாரம் செய்யும்படி என்னை அனுப்பியதாக' தெரிவித்தார்.

இதை நம்பிய விஜயலட்சுமி, அவரை வீட்டிற்குள் அனுமதித்தார். அப்போது அந்த ஆசாமி, பரிகாரம் செய்வதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை போட்டார். பின்னர் ஜயலட்சுமியிடம், நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி பாத்திரத்தில் போடுங்கள் எனக் கூறினார்.அவர் தெரிவித்தபடி விஜயலட்சுமியும் தான் அணிந்திருந்த செயின், வளையல்கள் உட்பட 10 சவரன் நகைகளை கழற்றி பாத்திரத்தில் போட்டார்.
பின்னர் அந்த நபர், பாத்திரத்தில் இருந்த மஞ்சள் கலந்த நீரை, விஜயலட்சுமியின் முகத்தில் தெளிவித்துவிட்டு, முகத்தை கழுவி வரும்படி கூறினார். அதேபோல் விஜயலட்சுமியும் பாத்ரூம் சென்று முகத்தை ழுவிக்கொண்டுவந்தார். ஆனால் அங்கு அந்த ஆசாமியும், பாத்திரத்தில் இருந்த நகைகளும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து விஜயலட்சுமி, அவரது கணவரிடம் கேட்டபோது, ‘அவ்வாறு நான் யாரையும் அனுப்பவில்லை' என கூறினார்.வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி திட்டமிட்டு நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயலட்சுமி குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலி ஜோதிடரை தேடி வருகின்றனர்.இதேபோல் கடந்த மாதமும் அமாவாசை தினத்தில் தங்கம் நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 சவரன் நகைகளை மர்ம ஆசாமி அபேஸ் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Power Officer ,cuddamadam ,astrologer ,
× RELATED சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி