×

காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மயிலாடுதுறை, பிப்.5: மயிலாடுதுறை அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் பகுதி வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பாலையூர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு எஸ்ஐ பாலாஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது. அதில் 960 மதுபாட்டில்களும், 200 லி சாராயமும் இருந்தது தெரியவந்தது, உடனே போலீசார் கார் டிரைவர் பேரளம் திருகொட்டாரத்தை சேர்ந்த சிவக்குமார்(30) என்பவரையும், அவருக்கு உதவியாக இருந்த காரைக்கால் நிரவி ஓடதுறையை சேர்ந்த அந்தோனிசாமி(34) ஆகியோரை கைது செய்தனர். மதுபாட்டில், சாராயம் மற்றும் அவைகள் கடத்தப்பட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது