×

தரங்கம்பாடி அருகே பெண்ணை கட்டையால் தாக்கி 6 பவுன் செயினை பறித்தவர் கைது

தரங்கம்பாடி, பிப்.5: தரங்கம்பாடி அருகே அதிகாலையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணை கட்டையால் தாக்கி 6 பவுன் செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி பக்கம் உள்ள புதுப்பேட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மீனவரான இவரது மனைவி வெண்ணிலா (48) கடந்த 30ம் தேதி காலை வெண்ணிலா வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மர்ம ஆசாமி கட்டையால் அவரை தாக்கி. அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வெண்ணிலாவை தூக்கி சென்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொறையார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதை ஊரைச் சேர்ந்த சுனாமி குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் தான் செயினை பறித்தது தெரியவந்தது. அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று தரங்கம்பாடி கடைவீதியில் நின்ற தகவல் கிடைத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 6 பவுன் தங்கசெயினையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Tharangambadi ,Thangangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...