×

க.பரமத்தி ஒன்றியத்தில் 5 இடத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் ஒரே தொட்டியில் காவிரி குடிநீர், போர்வெல் நீர் நிரப்பி வினியோகம் கிராம மக்கள் பரபரப்பு புகார்

க.பரமத்தி, பிப். 5: க.பரமத்தி ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பசுபதிபாளையம் பகுதியில் காவிரி குடிநீரும், போர்வெல் நீரும் ஒரே தொட்டியிலேயே நிரப்பி வினியோகம் செய்யப்படுகிறது குடிநீருக்கென தனியாக புதிய தொட்டி கட்டப்பட்டு காவிரி குடிநீர் வினியோகிக்க வேண்டுமென கிராம
மக்கள் வலியுறுத்தினர்.
க.பரமத்தி ஒன்றியத்தில் விசுவநாதபுரி, பவித்திரம், புன்னம், அத்திப்பாளையம், காருடையாம்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளில் ஒரே நாளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அந்தந்த பகுதியில் நடைபெற்றது. புன்னம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி, ஒன்றிய துணை செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் காவிரி குடிநீரும், போர்வெல் நீரும் ஒரே மேல்நிலைநீர் தேக்க தொட்டியிலேயே நிரப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே குடிநீருக்கென தனியாக தொட்டி அமைத்து நிரப்பி வினியோ
கம் செய்ய வேண்டும்.  ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் கிராம மக்களால் வலியுறுத்தப்பட்டது. இதேபோல்  மற்ற இடங்களில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களிலும் பொதுமக்கள் தங்களது தேவைகள் குறித்து பேசினர்.

Tags : DMK ,panchayat council meeting ,place ,Union Union Cauvery ,Borewell Water Supply Distributor ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி