×

தை அமாவாசையை முன்னிட்டு

திருப்புவனத்தில் முன்னோருக்கு  தர்ப்பணம்
திருப்புவனம், பிப்.5:தை அமாவாசையை முன்னிட்டு, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்பாள் கோயில் வைகை ஆற்றில் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சாமி தரிசனம் செய்தனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க திரண்டதால் வைகை ஆற்றில் கூட்டம் அலைமோதியது. திருப்புவனம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல், காளையார்கோவில் யானைமடு தெப்பக்குளத்தில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
மூதாட்டியிடம்
5 பவுன் பறிப்பு
காரைக்குடி, பிப்.5: காரைக்குடி அருகே உள்ள பலவான்குடியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி மெய்யம்மை(70). இவர்கள் இருவரும் டூவீலரில் பலவான்குடி ஆத்தங்குடி சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வீரப்பனையும், அவரது மனைவி மெய்யம்மையையும் கீழே தள்ளிவிட்டனர். பின்னர் மெய்யம்மை கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர்.
  குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடிவருகின்றனர்.

Tags : Daisy ,
× RELATED பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால்...