×

பள்ளி ஆண்டு விழா

மேலூர், பிப். 5: மேலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஆர்விஎன் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் கந்தசாமி ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளியின் புரவலர்களான முனைவர் சிவாஜிகணேசன், பேராசிரியர் ஜெயபால், முதுநிலை ஆசிரியர் அருள்பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags : festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...