×

செல்போன் பேசியதை அக்கா கண்டித்ததால் தங்கை தற்கொலை

காங்கயம்,பிப்.5:  மத்தியபிரதேசம் மாநிலம் மல்லாஞ்சேரி பகுதியை ராம்ரத்தான்காக்குடியா  என்பவரின் மகள் பாரதிகுடியா(21) இவரது தங்கை கமல்திகுடியா(19) இவர்கள் பெற்றோர் அங்கு விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஊதியூர் அருகே சிறுகிணறு பகுதியில் மின்சார  டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சமையல் செய்யும் வேலைக்காக சகோதரிகள் இங்கேயே கொட்டகை போட்டு  தங்கி கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்கை அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை அக்கா கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த தங்கை  கமல்திகுடியா நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு காட்டில் உள்ள  மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Sister ,suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை