×

திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

சூலூர், பிப்.5: திமுக சார்பில் சுல்தான் பேட்டையில் சமத்துவப் பொங்கல் மற்றும் ஊராட்சி சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், திமுக விவசாய அணி அமைப்பாளர் தமிழ்மணி, கோவை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்  பரணி கே.மணி, சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம், விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் சமத்துவப் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.இதைத் தொடர்ந்து ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. இதில், நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன், முன்னாள் ஒன்றியத் தலைவர் மணி, தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது பேசிய பொதுமக்கள், மத்திய அரசின்கீழ் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பிடங்கள்  தரமற்றவையாக உள்ளதாகவும், ஊர்ப் பொதுக் கழிப்பிடத்தின் கழிவுகள் பொது வெளியில் திறந்து விடுவதால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, குமாரபாளையம், அய்யம்பாளையம், வதம்பச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. இதிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

Tags : Equal Pongal Festival ,DMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...