×

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் பவானியில் நாளை நடக்கிறது

ஈரோடு, பிப். 5:   கோபி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பவானி பகுதியில் உள்ள மின் பயனீட்டாளர்களுக்கு மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேட்டூர் மெயின் ரோடு ஊராட்சிக்கோட்டையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (6ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் கோபி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நேரு கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.  எனவே,இந்த கூட்டத்தில் பவானி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சார்ந்த தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

Tags : power consumers ,Bhavani ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்