×

உதவித்தொகைகளை கேட்டு தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

 நாமக்கல்,  பிப்.5: நாமக்கல் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்கங்களின்  கூட்டமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், நேற்று நாமக்கல் கலெக்டர் ஆசியா  மரியத்திடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல்  மாவட்டத்தில் 4,500 ஓய்வூதிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு  ஓய்வூதிய ஆணை வழங்கப்படவில்லை. உடலுழைப்பு நலவாரியங்கள் ₹7 கோடி உதவித்தொகை  நிலுவையில் வைத்துள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். மேலும்,  ஓராண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து விதமான உதவித்தொகைகளையும்,  உடனடியாக வழங்க வேண்டும். நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில்  விண்ணப்பங்களை பெறும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை  வலியுறுத்தி, வரும் 18ம் தேதி நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம்  முன், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



Tags : petitioners ,collectors ,
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை