×

ஆரோவில்லில் கூரை வீட்டை எரித்த 2 பேர் அதிரடி கைது

வானூர், பிப். 5: வானூர் தாலுகா ஆரோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக தாவரவியல் பூங்கா உள்ளது. சம்பவத்தன்று இந்த பகுதியில் உள்ள கூரை வீட்டை இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த ஐயன் சேகர் (55), முத்துகிருஷ்ணன் (45), பாலாஜி (35), ரவி (36), செங்கேணி (35) உள்ளிட்ட 7 பேர் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் பூங்காவில் வேலை செய்து வந்த மேற்பார்வையாளர் பிரகாஷ் (28) என்பவரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) எழிலரசி வழக்கு பதிவு செய்து ஐயன் சேகர், முத்துகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஐயன் சேகரின் துப்பாக்கி, காரை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : persons ,roof house ,Auroville ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...