×

மந்தாரக்குப்பம் அருகே கோயில் திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் திருட்டு

நெய்வேலி, பிப். 5:  நெய்வேலி அருகே கோயில் திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் வீணங்கேணி தில்லைகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு திருவிழா நடந்தது. இதில் மந்தாரக்குப்பம் மற்றும் நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த பட்டுசாமி மனைவி கொளஞ்சி (48) என்பவர் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை யாரோ மர்ம ஆசாமி பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும்.இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணிடம் தாலி செயினை பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : theft ,Poon Thali Chain ,temple festival ,Mandarakuppam ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்