×

விசாரணை கைதி மரணத்தில் சந்தேகம்

கடலூர், பிப். 5: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன்(65). விவசாய கூலிதொழிலாளி. கடந்த 1.2.19 அன்று அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதனை அடுத்து அவர் அன்றே கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிறை மருத்துவர்கள் பரிசோதித்தனர். உடன் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறை அலுவலர் காந்தி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுந்தரராஜனின் உறவினர்கள் கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணனிடம் நேற்று மனு அளித்தனர். அதில் சுந்தரராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை கோரியும் குறிப்பிட்டிருந்தனர்.

Tags : death ,investigator prisoner ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...