×

வீரவநல்லூர் காவல்நிலையம் நள்ளிரவில் முற்றுகை

வீரவநல்லூர், பிப்.5: வீரவநல்லூரில் தொழிலாளியை தாக்கிய போலீசாரை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.வீரவநல்லூர் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் மகன் அகமதுயாசின்(21), அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற வீரவநல்லூர் எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சாமுவேல் என்பவர் அகமதுயாசின் மற்றும் அவரது நண்பர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனிப்பிரிவு போலீஸ் சாமுவேல் அகமதுயாசினின் செல்போனை பிடுங்கி காவல்நிலையத்திற்கு வந்து வாங்கிச்செல்லுமாறு எச்சரித்து சென்றுள்ளார். இதனையடுத்து அகமதுயாசின் தன்னை தனிப்பிரிவு போலீஸ் தாக்கியதாகக்கூறி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியினர், எஸ்.டி.பி.ஐ கட்சியினர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் அகமதுயாசினை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இரவு 11 மணியளவில் வீரவநல்லூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி ஆஷிஸ்ராவத் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Veeravanallur Police Station Siege ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது