×

தக்கலை அருகே டாஸ்மாக் கடையில் a27 ஆயிரம் மதுபானம் திருட்டு

நாகர்கோவில், பிப்.5: தக்கலை அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 27 ஆயிரம் மது பானம், ரூ. ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குமரி மற்றும் தென்மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி கலுங்கடி பகுதியில் துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபரும், தாங்கள் 4 பேர் சேர்ந்து டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தாக கூறியிருந்தார். இந்நிலையில், தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 3 வாலிபர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அழகன்பாறை மற்றும் மாங்குழியை சேர்ந்த இந்த 3 பேரும் வேறு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் செந்தில்குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் 27 ஆயிரத்து 830 மதிப்பிலான மது வகைகளும், ரூ. ஆயிரம் ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளதாக கூறி உள்ளார்.

Tags : store ,Takal ,Tasmask ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!