×

புறம்போக்கு நிலத்தில் நின்ற தேக்கு மரம் வெட்டி கடத்த முயற்சி

பூதப்பாண்டி, பிப்.5:  பூதப்பாண்டியை  அடுத்த அருமநல்லூர் வைராவிகோணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு  நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள தேக்கு  மரங்களை நேற்று முன்தினம் இரவு வெட்டி கடத்துவதாக  விஏஓ மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து அவர் தனது  உதவியாளருடன் சம்பவ இடம் விரைந்தார். இவரை கண்டதும் தேக்கு மரத்தை வெட்டிய  நபர் தப்பியோடி விட்டார். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும். இதையடுத்து மரத்தடியை கைப்பற்றிய விஏஓ அதனை தோவாளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது குறித்து அவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மரத்தை வெட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!