×

‘‘டிக்டாக்’’ ஆப் மூலம் பழகி சினிமாவில் நடிகை வாய்ப்பு வாங்கி தருவதாக சிறுமியுடன் உல்லாசம்: எம்பிஏ பட்டதாரி போக்சோவில் கைது

சென்னை, பிப். 5:  சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், 10ம் வகுப்பு படித்துவிட்டு சினிமாவில் நடிகையாக வாய்ப்பு தேடி வருகிறார். இதற்காக,  கடந்த 2 மாதங்களாக பெரியமேட்டில் உள்ள சினிமா இயக்குநர் ஒருவரிடம் சினிமா பயிற்சி பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து பெரியமேட்டிற்கு சினிமா பயிற்சிக்கு சென்ற இந்துமதி, திடீரென மாயமானார். மாலை, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை  சம்மந்தப்பட்ட சினிமா இயக்குநரை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அவர், மதியமே இந்துமதி வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து சினிமா இயக்குநர் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் இந்துமதி, ‘‘நான்  எனது நண்பருடன் மாமல்லபுரம் சென்றுள்ளதால், என்னை தேட வேண்டாம்,’’ என்று கூறியிருந்தார்.உடனே சினிமா இயக்குநர் சம்பவம் குறித்து இந்துமதியின் தந்தையிடம் தகவல் தெரிவித்தார். அதன்படி இந்துமதியின் தந்தை பெரியமேடு காவல் நிலையத்தில், எனது மகளை வாலிபர்  ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் இந்துமதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜில் இருப்பது  தெரியவந்தது. அதன்படி போலீசார் மாமல்லபுரம் சென்று சம்பந்தப்பட்ட லாட்ஜில் சோதனை நடத்தியபோது, இந்துமதி தனது ஆண் நபருடன் அறையில் உல்லாசமாக இருந்தது  தெரியவந்தது. உடனே போலீசார் சிறுமி இந்துமதி மற்றும் அவரை கடத்தி வந்த வாலிபரை சென்னை அழைத்து வந்தனர். கடத்தப்பட்ட நபர் சிறுமி என்பதால் இந்த வழக்கை பெரியமேடு போலீசார்,  வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அதன்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருவேற்காடு ஈஸ்வரன் நகரை சேர்ந்த தயாளன் (31) என்றும், எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்துமதி  சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதால் அவரது நடிப்பு திறமையை ‘‘டிக் டாக்’’ ஆப் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த தயாளன், இந்துமதியுடன் நட்பாக பழகி சினிமாவில் பெரிய நடிகையாக வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறி பழகியுள்ளார். அப்படியே, காதல் வலை விரித்துள்ளார். சிறுமி  என்பதால் தயாளன் கூறிய ஆசை வார்த்தைக்கு மயங்கி அவருடன் இந்துமதி பழகி வந்துள்ளார்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தயாளன், கடந்த 2ம் தேதி மாமல்லபுரத்தில் எனக்கு தெரிந்த சினிமா இயக்குநர் ஒருவரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, அழைத்து சென்று  அங்குள்ள லாட்ஜில் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பிறகு சிறுமியை தன் வயப்படுத்தி அவருடன் தயாளன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சிறுமியை ஏமாற்றி உல்லாசமாக இருந்த எம்பிஏ பட்டதாரியான தயாளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ேநற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : Actress ,graduate ,MBA ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...