×

பத்தூர், கமுககுடியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

திருவாரூர், பிப்.2: திருவாரூர் அருகே பத்தூர் மற்றும் கமுககுடியில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டமானது கடந்த மாதம் 9ம் தேதி  முதல் மாநிலம் முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் இந்த ஊராட்சி சபை கூட்டத்தை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சி வில்வனம்படுகை பகுதியில் துவக்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் இந்த கூட்டமானது மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பத்தூர் மற்றும் கமுககுடி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் சென்னை முன்னாள் மேயரும், எம்.எல்.ஏவுமான மா.சுப்ரமணியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், பாலசந்தர் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

Tags : DMK ,Panchayat Council meeting ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்