×

சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாகை, பிப்.2: நாகை  பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்த அரசுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர். ஆனந்த் தலைமை வகித்தார். நாகை மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் பாலாஜி பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசினார். விழாவில் சர் ஐசக் நியூட்டர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மகேஸ்வரன், இயக்குநர் சங்கர் மற்றும் நாகை, வேளாங்கண்ணி, நாகூர் பகுதியை சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சுதாகர் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் நடந்து முடிந்த அரசுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்களுக்கு தங்க நாணயமும், மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் வாரியத்தேர்வில் கல்லூரி மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி கவிதாவிற்கு கல்வி நிறுவனம் சார்பில் ரொக்க பணமும், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

விழாவில் சர் ஐசக் நியூட்டன்  பொறியியல் கல்லூரி முதல்வர் கிப்ட்சன் சாமுவேல், பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் திருநாவுக்கரசு,  கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ்,  ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிகண்ட பிரசாத், கல்லூரி வேலைவாய்ப்புதுறை அலுவலர் சார்லஸ், அனைத்து துறை தலைவர்களும், அனைத்து பேராசிரியர்களும், மாணவி, மாணவிகளும் கலந்து கொண்டனர் கல்லூரி மெரைன்பிரிவு துறைத்தலைவர் பிரேம்குமார் வரவேற்றார்.  முடிவில் கல்லூரி நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

Tags : Sir ,Isaac Newton Polytechnic College ,
× RELATED PT சார்: விமர்சனம்