×

சாலை மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் மீது வழக்கு

திருவையாறு, பிப். 2: விளாங்குடி அருகே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 50 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒக்கக்குடி, அணைக்குடி, மடம், சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி உட்பட 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்யும் கரும்பை அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கரும்பாலைக்கு 2 நாட்களுக்கு முன் அனுப்பினர். அப்போது தஞ்சை அருகே குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், எங்கள் பகுதியில் வந்து கரும்பை எடுத்துபோக கூடாது என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்து விளாங்குடி மெயின்ரோட்டில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி பதிவு செய்த கரும்பை குருங்குளத்துக்கும், பதிவு செய்யாத கரும்பை சாத்தமங்கலத்துக்கும் அனுப்பலாம் என்று பேசி முடித்தனர்.  இதைதொடர்ந்து அனுமதியின்றி பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதாக திருவையாறு காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் வேம்பு புகார் செய்தார். அதன்பேரில் அரசுக்கு முன்னறிவிப்பின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்ததாக 50 கரும்பு விவசாயிகள் மீது திருவையாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : road blocking ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில்...