×

மைனர் பெண்ணை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம், பிப்.2: ஜெயங்கொண்டம் அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்றவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அய்யூர் கிராமம் ராஜேந்திரன் என்பவரது உறவினர் மகள் முனியதிரையன் பட்டியை சேர்ந்த நடராஜன் மகள் மல்லிகா(17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரை  கழுமங்கலம் நாராயணசாமி மகன்தமிழரசன்(38) என்பவர் கடத்தி சென்றதாக உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மல்லிகாவை  அவரது பெற்றோர் அழகாபுரத்தில் உள்ள உறவினர்  ராஜேந்திரன் வீ்ட்டில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் அவரை  கழுமங்கலம் தமிழரசன்கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று நண்பர்களுடன் சேர்ந்து   கடத்தி சென்றதாக ராஜேந்திரன் மனைவி விஜயா ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து தமிழரசனை தேடிவந்தனர். இந்நிலையில் போலீசார் தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



Tags : Minor ,Boccas ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...