×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

திண்டிவனம், பிப். 2: திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தனிப்படை போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்பாக்கத்தில் இருந்து திண்டிவனம் பாரதிதாசன் பேட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் செஞ்சி அடுத்த தொண்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த திண்டிவனம் அடுத்த மேல்மாவிளங்கையை சேர்ந்த வேலியப்பன் மகன் பவளக்கண்ணன் (39) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து ரோசணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Tags : Sandy ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்