×

ஓராண்டுக்கும் மேலாக அங்கன்வாடி மையச் சுவர் சேதம்

விருதுநகர், பிப். 2: விருதுநகரில் ஓராண்டுக்கும் மேலாக அங்கன்வாடி மையச்சுவர் சேதமடைந்து இருப்பதால், குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, மையத்தின் சுவர்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் ஜக்கம்மாள்புரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கன்வாடி சுவரின் அடிப்பகுதியில் பூச்சுகள் உதிர்ந்து அபாய நிலையில் உள்ளது. கடந்த ஓராண்டாக சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள், பயிற்றுநகர்கள் இருந்து வருகின்றனர். எனவே, கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘தினந்தோறும் எனது மகனை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து வந்து விட்டுச் செல்கிறேன். சுவர் பாதி இடிந்த நிலையில் இருப்பதால், எப்போது விழுமோ என்ற அச்சம் உள்ளது. அங்கன்வாடி மைய சுவர்களை சீரமைக்க வேண்டும்’ என்றார்.

Tags : Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்