×

புத்த தியான நிலையம் மீது தாக்குதல்

பெ.நா.பாளையம், பிப். 2:  கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர பாரதி. இவர் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்கு வாக நிலைபடும் விழா நடக்க உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 புத்த மதத்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக துடியலூர் கே.என்.ஜிபுதூர் ஆறுமுக நகரில் உள்ள புத்த தியான நிலையத்தில் மேற்கூறைகள் அமைத்து விழா ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தியான நிலையத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து மகேந்தி பாரதி என்கிற மகிந்த ஷாக்கியா துடியலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Attack ,meditation center ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...