×

இண்டூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

தர்மபுரி, பிப்.2: இண்டூர் நடப்பனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(45). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு சித்ரா, வள்ளியம்மாள் என்ற 2 மனைவிகள். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக, வள்ளியம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில், வள்ளியம்மாள் மகன் கனகராஜ்(18), தாய் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார், அவரது சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி சிவரஞ்சனி(25). இருவரும் ரோடு போடும் ஒப்பந்த தொழிலாளர்கள். கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்களம் பகுதியில் ரோடு போடும் பணிக்காக, அங்கு தங்கியிருந்து வேலை பார்த்தனர். இந்நிலையில் கணவன், மனைவியிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சிவரஞ்சனி, ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தனர். இங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சிவரஞ்சனி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Indore ,
× RELATED சூதாடிய 11 பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல்