×

இந்து சமய அறநிலையத்துறையில் அறங்காவலர் நியமன மாவட்ட குழு அமைப்பு விண்ணப்பிக்க பிப்.18 கடைசி

திண்டுக்கல், பிப். 2: இந்து சமய அறநிலையத்துறையில் அறங்காவலர் நியமன மாவட்ட குழு அமைக்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக மாவட்டக்குழு ஏற்படுத்த இந்து சமய விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 25 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்த தகுதி உள்ளிட்ட இதர விபரங்களை திண்டுக்கல் உதவி ஆணையர் மற்றும் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆய்வாளர்கள் அலுவலகங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 18ம் தேதிக்குள் திண்டுக்கல் பாண்டியன் நகர், 2வது தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உதவி ஆணையர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags : Trustee Appointment District Committee ,Hindu Religious Temporal Pub. ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்