×

கல்லிடைக்குறிச்சியில் எஸ்ஐக்கு பாராட்டு விழா

அம்பை, பிப். 2:  மாஞ்சோலை காவல் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்ஐ கண்ணனுக்கு பாராட்டு விழா, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நடந்தது.  டிஎஸ்பி ஜாகீர்உசேன் தலைமை வகித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். எஸ்ஐக்கள் வேல்முருகன், பிச்சையா, காஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தி பேசினர். எஸ்ஐ ஆதம்அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு எஸ்ஐ செந்தில், ஸ்டேஷன் ரைட்டர் மாரியப்பன், பெண் காவலர்கள் வசந்தா, அனிதா, சித்ரா, பிச்சம்மாள் உள்ளிட்ட அம்பை, கல்லிடை, மணிமுத்தாறு, வீரவநல்லூர் உள்ளிட்ட அம்பை சப் டிவிஷனுக்குட்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், ஓய்வுபெற்ற காவல்துறையினர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். கண்ணன் ஏற்புரையாற்றினார். எஸ்ஐ ராமலிங்கம் நன்றி கூறினார்.

Tags : SI ,felicitious event ,Kallitta Kuchi ,
× RELATED பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது