பாவூர்சத்திரம், பிப். 2: மேலப்பாவூரில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். முருகையா தேவர், பூப்பாண்டியன், பேச்சிமுத்து, கந்தசாமி, அழகேஷ், தங்கம், சுப்பிரமணியன், சுப்பையா, முருகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வரவேற்று பேசினார். தலைமை கழக பிரதிநிதி வி.பி.ராஜன், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.கூட்டத்தில் இளைஞரணி அழகுசுந்தரம், மாணவரணி ராஜா, விவசாய அணி சாமிதுரை சாக்ரடீஸ், ஜெகதீசன், கனகராஜ் முத்துப்பாண்டி, மதிச்செல்வன், வீமன், ஆசிரியர் இளமதி, அருணாசலம், ஆறுமுகம், குட்டிராஜ், பலவேசம், கண்ணன் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பிரதிநிதி செல்லத்துரை நன்றி கூறினார். தொடர்ந்து குலசேகரப்பட்டி ஊராட்சி, கல்லூரணி ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.