×

புளியங்குடியில் இறந்து கிடந்தவர் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர்

புளியங்குடி, பிப். 2:  புளியங்குடி கள்ளன்பறம்பில்   இறந்து கிடந்த வாலிபர்,  மாயமான  மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.புளியங்குடி அருணாசல விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சிக்கந்தர் பாதுஷா (25). மனநிலை பாதிக்கப்பட்ட இவரை புதுக்கோட்டை மாவட்டம், அபிராமிபட்டினம் மனநல காப்பகத்தில் சேர்த்திருந்தனர். கடந்த மாதம் அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் பொங்கலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் பாதுஷா திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவரது தந்தை முகமது இஸ்மாயில் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முவேல் விசாரித்து வந்த நிலையில், புளியங்குடி கள்ளன்பரம்பில் சிதைந்த நிலையில் வாலிபரின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் சமீபத்தில் மாயமான சிக்கந்தர் பாதுஷாதான் என்று அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். அவர் இறந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அழுகி துர்நாற்றம் அடித்தது. உடலை பிரதே பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது