×

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் பிளாட்பார மேற்கூரை மாற்றம் ₹20 லட்சத்தில் பணிகள் தொடங்கின

நாகர்கோவில், பிப்.2: நாகர்கோவில்  சந்திப்பு ரயில் நிலையத்தில் 1,
1ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் முதல் பிளாட்பாரத்தில் தான் முக்கிய ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். இந்த பிளாட்பார மேற்கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் போடப்பட்டு இருந்தது. ஒரு சில இடங்களில் உடைந்து இருந்ததால் மழை காலங்களில் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடியாது. எனவே முதல் பிளாட்பாரத்தின் மேற்கூரையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இதன் அடிப்படையில் தற்போது இந்த பிளாட்பாரத்தில் மேற்கூரையை மாற்றும் பணி நேற்று தொடங்கியது. சிமெண்ட் ஆஸ்பெஸ்டாசை அகற்றி விட்டு, குளிர் தன்மையுடன் கூடிய பிளேட் வகை ஆஸ்பெஸ்டாஸ் அமைக்கப்படுகிறது.  நாகர்கோவில் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போது தான் மேற்கூரை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக ரயில் பயணிகள் கூறினர்.

Tags : Nagarcoil Junction Railway Station ,change ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு