×

புதியம்புத்தூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஓட்டப்பிடாரம், பிப்.2:    புதியம்புத்தூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.   புதியம்புத்தூரை அடுத்துள்ள புதூர்பாண்டியாபுரம் பகுதியில் டிப்பர் லாரியில் ஆற்று மணல் கடத்தி செல்லப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் பிரசாத் மற்றும் தலையாரி நந்தினி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதியம்புத்தூர் உதவி ஆய்வாளர் மாதவராஜ் உதவியுடன் தூத்துக்குடி மதுரை மெயின்ரோட்டில் உள்ள புதூர் பாண்டியாபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து லாரி டிரைவர் முருகன்புரத்தை சேர்ந்த சேர்மத்துரை(28) மற்றும் அகரத்தை சேர்ந்த கிளீனர் மாரி(36) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்திவந்த டிப்பர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Sandy ,Newbathur ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்