×

கோரம்பள்ளம் சித்தர் பீடத்தில் பிப்.4ம் தேதி 2019 கிலோ மிளகாய் வத்தல் யாகம்

தூத்துக்குடி, பிப்.2: கோரம்பள்ளம் சித்தர் பீடத்தில் வரும் 4ம் தேதி 2019 கிலோ மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகர் சித்தர் பீடத்தில் வருகிற 4ம்தேதி தை மாத சர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு 2019 கிலோ மிளகாய் வத்தல் சிறப்பு மகாயாகம் நடக்கிறது. செல்வம், கல்விவளம், அரசு வேலை உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதலுக்கேற்ப சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹாயாக வழிபாடுகள் நடக்கிறது.அன்று காலை 6 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கரா, காலபைரவர் ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு 2019 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு மகா யாகம் துவங்கி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் 16 வகையான அபிஷேகமும், 1மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு சிறப்பு யாக வழிபாடுகள் நிறைவுறுதலும், 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.இதையொட்டி அன்று காலை 6மணி முதல் இரவு 7மணி வரை மகா பிரத்தியங்கராதேவி மகா யந்திர பாராயணம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : chopper cigarette chapel ,
× RELATED கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது