×

மதுராந்தகம் அருகே தென்னாடு கிராமத்தில் தனியார் குவாரி அமைக்க கிராம மக்கள் அனுமதி

காஞ்சிபுரம், பிப்.2:காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தொன்னாடு கிராமத்தில் கல்குவாரி அமைக்க ஒப்புதல் தெரிவித்து, கலெக்டர் பொன்னையாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.மதுராந்தகம் அடுத்த தொன்னாடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் தனியார் நிறுவன கல்குவாரி அமைக்க இருப்பதை அறிந்தோம். இதையடுத்து, எங்கள் ஊர் ஏரிக்கு நீர் வரும் பாதையை அவர்கள் மறித்து விடுவார்கள் என்ற அச்சத்தால் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தோம்.

பின்னர் பொதுமக்களுடன், தனியார் கல்குவாரி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ஏரிக்கு நீர்வரும் பாதையை மறிக்க மாட்டோம். இதற்காக தனிவழி அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், கிராம மக்களுக்கு இடையூறு இல்லாமல் குவாரியை நடத்தி கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனுவை திரும்ப பெற்று கொள்கிறோம். மேலும் தனியார் கல்குவாரி அமைக்க ஒப்புதல் அளிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Village villagers ,quarry ,Thenadu ,village ,Madurantham ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...