×

கிருஷ்ணகிரி மாவட்ட அறங்காவலர் குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி, பிப்.1:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படவுள்ளதால், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும். ₹10 லட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருவாய் பெறும் இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட திருக்கோயில்களில், பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அறங்காவலர் நியமன குழு ஏற்படுத்தப்படவுள்ளது.

இதற்கு இந்து சமயத்தை சார்ந்த 25 வயது பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் வருகிற 15ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, “உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமண மண்டப வளாகம், குமாரசுவாமிப்பேட்டை, தர்மபுரி - 636701” என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் இதர விவரங்களை தர்மபுரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆய்வாளர்கள் அலுவலகங்களில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு உதவி ஆணையர் நித்யா தெரிவித்துள்ளார். 

Tags : Krishnagiri District Trustee Committee ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்