×

செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருப்பில் இருந்த 960 கிலோ ரேஷன் அரிசி கிட்டங்கிக்கு அனுப்பப்பட்டது

செங்கோட்டை, பிப். 1:  செங்கோட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 960 கிலோ ரேஷன் அரிசி, அரசு கிட்டங்கிக்கு அனுப்பப்பட்டது.
செங்கோட்டை ரயில் நிலையம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 960 ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருப்பில் இருந்து வந்தது. இதற்கு உரிமை கோரி யாரும் முன்வராததால் 34 மூட்டைகளில் இருந்த 960 கிலோ அரிசியை நேற்று செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ், செங்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் அழகப்பராஜா மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். இந்த அரிசி தென்காசி நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : railway station ,Chenkottai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!