×

ஆலங்குளம் அருகே இலவச சைக்கிள் வழங்க கோரி மாணவர்கள் மறியல் போராட்டம்

ஆலங்குளம், பிப். 1:  ஆலங்குளம் அருகே இலவச சைக்கிள் வழங்கக் கோரி மாணவர்கள், பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பள்ளியில் பிளஸ்1 முடித்து இந்தாண்டு பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் தகுதியுடைய சிலருக்கும், அரசுதவி பெறாத வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று சைக்கிள் கிடைக்காத மாணவர்கள், இலவச சைக்கிள் வழங்கக் கோரி பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பள்ளி தாளாளர் பொன்ராஜ் மற்றும் போலீஸ் எஸ்ஐ பழனி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அரசுதவி பெறாத மானவர்களுக்கு அரசு சார்பில் சைக்கிள் வழங்கவில்லை என்றும், தகுதியுடைய விடுபட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையேற்று மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : cycling ,Alankulam ,
× RELATED ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!