×

ஆலந்தலையில் விளையாட்டு விழா

திருச்செந்தூர், பிப். 1: ஆலந்தலை திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, கார்மல் நடுநிலைப்பள்ளி, திருக்குடும்பம் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் விளையாட்டு விழா நடந்தது. கல்லாமொழி பங்குதந்தை ஜேம்ஸ்பீட்டர் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்பி முரளிராம்பா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் ஜெயக்குமார், எஸ்பிக்கு நினைவு பரிசாக பைபர் படகு வழங்கினார்.  இதில் பங்குதந்தைகள் பெரியதாழை செல்வன், இலங்கநாதபுரம் ரத்தினராஜ் மற்றும் ஊர்நல கமிட்டி தலைவர் தொம்மை, பரிசுத்த ரொசாரி மாதா சபை பிரசிந்தியார் களிஸ்டன், கப்பல் மாலுமி சங்க தலைவர் அன்டன், மீனவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்கள் ஆரோக்கியம், ரமேஷ், ஜேம்ஸ், பழைய மாணவர்கள் சங்க தலைவர் ஜெயபால் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நேற்று மூன்று பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்செந்தூர் தாசில்தார் தில்லைபாண்டி, ரெக்ஸ்ஹாரிசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர், இணை பங்குதந்தை ரோஷன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Sports Festival ,Alandala ,
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா