×

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி பிப்.2க்குள் பதிவு செய்ய அழைப்பு

ஈரோடு, பிப்.1 : மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் பிப்.2ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை கீழ் பாக்கம் நேரு விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்.16ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 2ம் தேதி (சனிக்கிழமை) ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 95245 36767, 99782 59088 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : recruiters ,
× RELATED சர்வர் கோளாறு காரணமாக டி.என்.பி.எஸ்.சி....