×

மகாமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

ஈரோடு, பிப். 1:   ஈரோடு பெரியசேமூர் மகாமாரியம்மன் கோயிலில் பிப்.6ம் தேதி பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.ஈரோடு கனிராவுத்தர் குளம் சின்னசேமூரில் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.   இதில் பிப்., 5ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வர உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான பிப்.6ம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.7ம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்குதலும், மதியம் 12 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. பிப். 8ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.



Tags : Pongal Festival ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...