×

கோயில்களில் அறங்காவலர் நியமனம்

திருவாரூர். பிப்.1: திருவாரூர் அறநிலைய துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு  குறைவாக வருமானம் பெறும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவல்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு முதலாவதாக மாவட்ட குழு ஒன்று அரசால் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் இதற்கு இந்திய நாட்டின் பிரஜையாக உள்ள இந்து சமயத்தினரிடமிருந்து மட்டும்  தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவின் கீழ் தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை திருவாரூர் இந்துசமய உதவி ஆணையர் அலுவலகத்தில் பெற்று 15ந் தேதிக்குள் கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : temples ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...