×

மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் துவங்க வலியுறுத்தல்

செம்பனார்கோவில், பிப்.1: செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை ஆலோசகர் கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் தலைமை வகித்தார். கிளை பொருளாளர் முக்தார், துணை செயலாளர்கள் சல்மான், அசாருதீன், முஹம்மது ஜஸ்பர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் முஹம்மது சஹின் வரவேற்றார். கூட்டத்தில் கிளை வளரச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து கலந்தாய்வு நடந்து. கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் 40 சதவீதம் விவசாய நிலத்தை மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் அழிந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 1986ம் ஆண்டு நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் துவங்க வேண்டும். முல்லை பெரியாரின் புதிய அணை கட்டும் ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Mayiladuthurai - Tharangambadi ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...