×

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடு

கொடைக்கானல், பிப். 1:  கொடைக்கானல் மேல்லை கிராமங்கள் வில்பட்டி, பள்ளங்கி. இப்பகுதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மாதம் பிறந்து 1ம் தேதி பொருட்கள் வாங்க சென்றால் அரிசி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. மற்ற பொருட்களான பருப்பு, சீனி, பாமாயில் போன்றவை வழங்குவதில்லையாம். மேலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது வேறு பொருட்களான தீப்பெட்டி, உப்பு, மாவு போன்றவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும் என விற்பனையாளர்கள் நிர்பந்திப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் பொருட்களை வெளிச்சந்தையில் விற்று விட்டு நாங்கள் எப்போது கேட்டாலும் இல்லை என்றே பதில் தெரிவிக்கின்றனர். ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால் இதர பொருட்களை வாங்கும்படி நிர்பந்திக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : hills ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...