×

ஈத்தாமொழியில் நில அளவையர் மீது தாக்குதல்

நாகர்கோவில், பிப்.1: நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த கூடலிங்கம் (24) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடன் பணியாற்றி வருகின்ற குருவிகுளம், அத்திப்பட்டியை சேர்ந்த நாகேந்திரகுமார் என்பவருடன் தர்மபுரம் கிராமம் இலந்தையடிதட்டு பகுதியில் நில அளவை பணிகள் மேற்கொள்ள சென்றார்.நில அளவை பணியில் இருக்கும்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்ற பரசுராமன் என்பவர் இருவரையும் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். மேலும் கெட்டவார்த்தைகள் பேசி கையாலும், கம்பாலும் அடித்து மிரட்டியுள்ளார். இது தொடர்பாக கூடலிங்கம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...