×

குவைத்தில் பலியான மீனவர் உடல் குமரி வருகை

நாகர்கோவில், பிப்.1: குமரி மாவட்டம், சைமன்காலனியை சேர்ந்தவர் சகாய அருண் பிரின்சன்(23). இவர் குவைத் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று இருந்தார். அங்கு கடந்த 17ம் தேதி தர்கா என்ற துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைபடகில் இருந்து திடீரென மாயமானார்.இதுதொடர்பான தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த படகில் சைமன்காலனியை சேர்ந்த மேலும் 3 பேரும் உடனிருந்தனர். இந்தநிலையில் 10 நாட்களுக்கு பின்னர் மீனவர் சகாய அருண் பிரின்சன் இறந்தது தெரியவந்தது. அவரது உடல் துறைமுக பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டது. பின்னர் விமானம் மூலம் நேற்று சொந்த ஊருக்கு உடல் கொண்டுவரப்பட்டது.

Tags : fisherman ,Kuwait ,Kumari ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...