செங்கல்பட்டு, பிப்.1: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் உள்ள பட்டம்மாள் அழகேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு பக்தவசத்சலம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வாமனன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜகுமார் வரவேற்புரை ஆற்றினார். சங்க இலக்கியத்தில் மக்கள் பண்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார். மேலும் காஞ்சி கல்வியல் கல்லூரி முதல்வர் சீதாராமன் உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் ஆய்வுக்கட்டுறைகளை சம்ர்ப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி உதவிப் பேராசிரியர் பத்மநாபன் நன்றி கூறினார்.