×

முதல்வர் கோப்பை போட்டி 567 வீரர், வீராங்கனைகளுக்கு ₹4.25 லட்சம் ரொக்க பரிசு

கடலூர், ஜன. 31: தமிழக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்டந்தோறும் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 28ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, பூபந்து, பளுதூக்குதல் டேபிள் டென்னிஸ் மற்றும் தடகள போட்டிகளில் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களிலும் 1640 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 567 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 250யை ரொக்கப்பரிசாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அலுவலர் ராஜா சான்றிதழ்களை வழங்கினார். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும், அவர்களுக்கு சீருடைகள், பயிற்சிகள், பயணப்படி ஆகியன வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,ladies ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...