கொள்ளிடம், ஜன. 31: கொள்ளிடம் அருகே எருக்கூரில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. சுதந்திர போராட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரி குடும்பத்தால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலை புதுப்பிக்குமட் பணி நேற்று துவங்கியது. கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார். சீர்காழி முன்னாள் நகர்மன்ற தலைவர் கணிவண்ணன், கோயில் அறங்காவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.