×

தென்னிந்திய பாக்சிங் போட்டி காரைக்கால் இரட்டையர்கள் தங்கம், வெள்ளி வென்று சாதனை புதுச்சேரி முதல்வர் பாராட்டு

காரைக்கால், ஜன. 31:  கேரளாவில் நடந்த தென்னிந்திய பாக்சிங் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று சாதனை படைத்த காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இரட்டையர்களை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டினார். கேரள மாநிலம் கொச்சினில் கடந்தவாரம் தென்னிந்திய மூதாய் கிக் பாக்சிங் போட்டி நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலம் சார்பில் காரைக்கால் விஆர்எஸ் மார்ஷியல் ஆர்ட் அகாடமி பயிற்சி இயக்குனர் குமார் தலைமையில் அவரது மாணவர்கள் ஹரிணி (8) ஜூனியர் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் ஜூனியர் பிரிவில் விசாகன்(8) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். (இவர்கள் இருவரும் இரட்டையர்கள்) அதேபோல் சீனியர் ஆண்கள் பிரிவில் காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவரும் முகம்மது இப்ராஹிதம் (20) வெண்கலப்பதக்கம்  வென்றார். தென்னிந்திய பாக்சிங் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இரட்டையர்கள், வெண்கலம் வென்ற வீரர் மற்றும் பயிற்சியாளர் குமார் ஆகியோர் பதக்கங்களுடன் புதுச்சேரி வந்தனர். வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்தினார்.

Tags : South Indian ,boxing tournament ,twins ,Karaikal ,Puducherry ,
× RELATED தென்னிந்திய திரைப்படம் மற்றும்...