×

தேசிய அளவில் தங்கம் வென்ற வடுகபட்டி வாலிபர்

பெரியகுளம், ஜன. 31:  பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த வாலிபர் தேசிய அளவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயங்களில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்க வாழ்த்துக்ககள் குவிந்து வருகிறது.பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்த பாபு மகன் மாதேஸ் (17). மதுரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி மதுரை அமெரிக்கன் பள்ளியில் ப்ளஸ்1 படித்து வருகிறார். ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஓட்டப் பந்தயத்திற்கான பயிற்சு எடுத்து வருகிறார். 17 வயதிற்கான தேசிய அளவில் நடந்த கேளோ இந்திய விளையாட்டுப் போட்டி சில நாட்களுக்கு மன் மகாராஸ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்றது.இதில் மாதேஸ் 800 மற்றும் 1500 மீ. ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றார்.இதுகுறித்து மாதேஸ் கூறுகையில், ‘எனது வெற்றிக்கு பயிற்சியாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் எனது நண்பர்கள், பெரியகுளம் தீயணைப்பு வீரர் செந்தில் மாயன் ஆகியோரது ஊக்குவிப்பு காரணம்’ என்றார்.
இவரை வடுகபட்டி இளைஞர் விளையாட்டு கழகம் பாராட்டியது.


Tags : Gold wrestler ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு